tamilnadu

img

துபாயில் சிக்கித் தவித்த 359 பேர் தாயகம் திரும்பினர்

சென்னை, மே 9- கொரோனா வைரஸ் எதிரொலியால் துபாயில் சிக்கிய 359 பேர் சிறப்பு விமானம்  மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், வெளிநாடு வாழ்  இந்தியர்கள் பலர் தாயகம் திரும்ப முடியா மல் தவித்துவருகின்றனர். இதனை யடுத்து தற்போது அவர்களை தாயகம் அழைத்து வருவதற்காக சிறப்பு விமா னங்களை மத்திய அரசு இயக்கத் தொடங்கி யுள்ளது.

அதன்படி,  துபாயிலிருந்து இரண்டு சிறப்பு விமானங்கள் சென்னை வந்த டைந்தன. முதல் விமானத்தில் 182 பேரும்,  இரண்டாவது விமானத்தில் 177 பேரும் என மொத்தம் 359 நபர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர். அப்போது விமான நிலையம் வந்த டைந்த நபர்களுக்கு முதலில் சுங்க சோதனை மற்றும் குடியுரிமை சோதனை  செய்யப்பட்டது. பின்னர் விமான நிலை யத்திலேயே கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு  மருத்துவமனை அழைத்து சென்று சிகிச்சை யளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.  அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் 359  நபர்களும் தனியார் கல்லூரிக்கும் ஹோட்  டல்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்ட னர். அங்கு அவர்கள் 14 நாட்கள் தனிமைப்ப டுத்தப்படுவார்கள். பின்னர் தொற்று  இல்லை என்று உறுதிசெய்யப்பட்டவுடன் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படு வார்கள்.

;