tamilnadu

img

காங்கோ விமான விபத்து: 29 பேர் பலி

காங்கோவில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 29 பேர் பலியாகினர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
காங்கோவின் கோமா நகரில் சிறிய விமானமான ’டோர்னியர் - 22’ வீடுகளுக்கு இடையே மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில்  29 பேர் பலியாகினர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்பட்ட பகுதியில் கடுமையான புகைமூட்டம் காணப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

;