tamilnadu

img

பாகிஸ்தான் சாலை விபத்தில் சிக்கி 24 பேர் பலி

பாகிஸ்தானில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் சிக்கி 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. பாக்ரா என்ற பகுதியில் வரும்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிர்பாராத விதமாக அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் 24 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

;