tamilnadu

img

பின்ஃபோன் புயல் தாக்குதலில் சிக்கி 16 பேர் பலி

பிலிப்பைன்ஸ்நாட்டில் பின்ஃபோன் புயல் தாக்குதலில் சிக்கி 16 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கிராமங்கள் பின்ஃபோன் புயல் தாக்கியது. மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதில் மின்சாரக் கம்பிகள் பல இடங்களில் விழுந்து மின்தடை ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.  இந்த புயலில் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
 

;