தெலங்கானாவில் 3 லட்சம் கேட்டு 7 வயது சிறுவனை கடத்திய 10ம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் மீர்பேட் பகுதியில் 7 வயது சிறுவனை அடையாளம் தெரியாjத நபர் கடத்திச் சென்னார். பின்னர் கடத்தப்பட்ட சிறுவனின் தந்தைக்ளு தொலைபேசி மூலம் 3 லட்சம் கொடுக்கவேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து காணாமல் போன சிறுவனின் தந்தை காவல் துறைக்கு புகார் அளித்தார். இதையடுத்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் குழந்தையை கடத்திய 10ம் வகுப்பு சிறுவனை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.