3.3 கோடிப் பேர் மனு
உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்ளை தடுக்க பல்வேறு நாடுகளும் தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. சில விஞ்ஞானிகள், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.
அமெரிக்காவில் கொரோனாவுக்கு 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸை உருவாக்கியது சீனா தான் என அமெரிக்கா திரும்பத் திரும்ப பொய் பேசி வருகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அளித்த பேட்டியில், கொரோனா வைரசிற்கு தடுப்பூசியை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்தாண்டு இறுதிக்குள் தடுப்பூசி மருந்தை அமெரிக்கா கண்டறிந்து விடும் என நம்புகிறேன் என்றார்.
வேறொரு நாட்டில் நோய்த்தடுப்பு மருந்து தயாரிக்கப்படுகிறதா என்பதைப் பற்றி கவலைப்படவில்லை. நான் கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடிக்க விரும்புகிறேன் என்றும் கூறினார்.
கொரோனாவால் அமெரிக்கர்கள் 60 ஆயிரம் பேர் முதல் ஒரு லட்சம் பேர் வரை உயிரிழப்பர் என டிரம்ப் கணித்திருந்தார். தற்போது அந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். இந்த நிலையில், “இது ஒரு பயங்கரமான விஷயம்” என்று கூறிய டிரம்ப் இதற்கு மேல் ஒருவரையும் நாம் இழக்கக்கூடாது எனக் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “வைரஸ் எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவிரை, அவசரகாலத்திற்கு பயன்படுத்திக் கொள்ள உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சமீபத்தில் அங்கீகாரம் அளித்துள்ளது” என்றார்.
கொரோனா வைரஸால் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த டிரம்ப், “வைரஸால் பாதிப்புக்குள்ளாகியுள்ள பொருளாதாரத்தை புதுப்பிக்க வேண்டியது அவசியம் என்றார்” அமெரிக்காவில் கடந்த ஆறு வாரங்களில் மட்டும் சுமார் 30.3 மில்லியன் மக்கள் வேலையில்லாக்கால உதவிகேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயாரக் போஸ்ட் இணையதளத்திலிருந்து