6 மாத காலத்திற்கு, ஊழியர்களின் சம்பளத்தை 20 சதவிதம் வரை குறைத்துள்ளதாக டி.வி.எஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கோவிட்-19 பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் ஆட்டோமொபைல் துறையில் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தப்பட்டதால், பல நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்தன. இந்த நிலையில், டி.வி.எஸ் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், இந்த ஆண்டு மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான 6 மாத காலத்திற்கு ஊழியர்களின் சம்பளத்தை 20 சதவிதம் குறைத்துள்ளதாக டி.வி.எஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த 6 மாத காலத்திற்கு, மேலாண்மை நிலை ஊழியர்களுக்கு 15 முதல் 20 சதவீத சம்பளம் குறைத்துள்ளதாகவும், நிர்வாக நிலை ஊழியர்களுக்கு 5 சதவீத சம்பளம் குறைத்துள்ளதாக டி.வி.எஸ் நிறுவனம் அரிவித்துள்ளது.