புதிய விதிகளை அமல்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஜூன் 13-ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிராய் அறிவித்துள்ளது.
மொபைல் எண்ணை மாற்றாமலேயே வேறு தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு மாறிக்கொள்ளும் வசதி வெளிநாடுகளில் சில மணி நேரங்களிலே மாறிவிடும். ஆனால், இந்தியாவில் இதற்கு 7 நாட்களுக்கு பிறகு தான் மாற்றப்படும். மேலும், இதற்கு கட்டணமாக 19 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு இந்த கட்டணத்தை 4 ரூபாயாகக் குறைத்ததும், வேறு நெட்வொர்க் மாறுவதற்கு அதிகபட்சம் நான்கு நாட்களாக குறைத்து உத்தரவு பிறப்பித்தது.
இதை அடுத்து கடந்த ஏப்ரல் மாதத்தில், இது குறித்து தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, நிறுவனங்கள் இதற்கு இன்னும் தயாராகவில்லை என அறிவித்தனர். இந்நிலையில், புதிய விதிகளை அமல்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஜூன் 13-ல் இருந்து செப்டம்பர் 30-ஆம் தேதி அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிராய் அறிவித்துள்ளது.