tamilnadu

img

மே 4 முதல் உள்நாட்டு விமானங்களில் முன்பதிவு....  ஏர் இந்தியா அறிவிப்பு 

தில்லி 
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு 2-வது கட்ட ஊரடங்கு விதித்துள்ளது. இந்த ஊரடங்கு வரும் மே மாதம் 3-ஆம் தேதி நிறைவடைகிறது. எனினும் வரும் 20-ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவாக உள்ள இடங்களில் ஊரடங்கை தளர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில தொழில் நிறுவனங்கள் சேவைகளைத் தொடங்க உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. 

இந்நிலையில்  மே 4-ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களில் மட்டும் முன்பதிவு தொடங்கப்போவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. ஜூன் 1-ஆம் தேதி முதல் சர்வதேச விமானங்களில் முன்பதிவு தொடங்கும் என தெரிவித்துள்ளது. 
 

;