tamilnadu

img

தீபாவளி பட்டாசு விற்பனை... நேரத்தை நீட்டிக்க விக்கிரமராஜா கோரிக்கை...

சென்னை:
தீபாவளியையொட்டி பட்டாசு விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு விக்கிரமராஜா கோரிக்கை விடுத் துள்ளார்.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம்  மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் வணிக நிறுவனங்கள் அனைத்தும் இரவு 12 மணி வரை செயல்பட அனுமதிக்க கோரியும் பட்டாசு கடைகள் அனைத்தும் நள்ளிரவு வரை திறந்து வைத்திருக்க அனுமதிக்க வேண்டும், தீபாவளி பண்டிகைக்காக நவம்பர் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விக்கிரம ராஜா, “தமிழகம் முழுவதும் மார்க்கெட் இயங்காததால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு தொழிலைக் காக்கவும் அனைத்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் தீபாவளி பண்டிகையையொட்டி நள்ளிரவு வரை அனைத்து கடைகளையும் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும்” என்றார்.இக்கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் துணை முதல்வரை சந்தித்துப் பேச உள்ளதாகவும் அவர் கூறினார்.