tamilnadu

img

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

விழுப்புரம், அக்.18- விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் வசித்த வர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி மகேஸ்வரி ஆரோ வில் பகுதியில் உள்ள ஆரோ பவுண்டேஷனில் பணி புரிந்து வந்தார். இவர்களது மூத்த மகள் கிருத்திகா  12ஆம் வகுப்பும், இளைய மகள் சமிக்ஷா  எட்டாம் வகுப்பும் படித்து வந்தனர்.   இந்நிலையில்  விழுப்புரத்தில் உள்ள உறவினர் கள் கடந்த திங்கள்கிழமை அன்று மகேஸ்வரியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு  பேசியுள்ளனர்.  அதன்பின்பு வியாழக்கிழமை தொடர்பு கொள்ள முயற்சித்த போது சுந்தரமூர்த்தி, மகேஸ்வரி ஆகிய இருவரின்  செல்போன்கள்  அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் வெள்ளிக்கிழமை நேரில் ஆரோவில் வந்து பார்த்த போது வீட்டின் உள் பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுந்தர மூர்த்தி, அவரது மனைவி, இரண்டு மகள்கள் ஆகி யோர் இறந்து கிடந்தனர்.  அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக  ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  சம்  பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 பேரின்   உடல்களை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   இது தொடர்பாக ஆரோவில்  போலீசார் வழக்குப்  பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்  பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட  சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.