tamilnadu

img

லண்டன் கண்டெய்னரில் சடலங்கள் விவகாரம் : வியட்நாமை சேர்ந்த 8 பேர் கைது

லண்டனில் கண்டெய்னர் லாரியில் ஒன்றில் 39 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் வியட்நாமை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

லண்டனில் கிழக்கு பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் கடந்த மாதம் 23-ஆம் தேதி பல்கேரியா நாட்டின் கண்டெய்னர் லாரி ஒன்றில் 39 சடலங்களை போலீசார் கண்டெடுத்தனர். சடலமாக மீட்கப்பட்டவர்களில் 31 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் ஆவர். இந்த வழக்கில், லாரியை ஓட்டிவந்த டிரைவரான 25 மதிக்கத்தக்க வடக்கு அயர்லாந்து நாட்டவர் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். 

அவர் மீது கொலை, ஆள்கடத்தல், சட்ட விரோத குடியேற்றத்திற்கு உதவியது என பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. பிணமாக கண்டுபிடிக்கப்பட்ட 39 பேரும் வியட்நாமை சேர்ந்தவர்கள் என கடந்த வாரம் இங்கிலாந்து போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக வியட்நாமில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் இறந்தவர்களின் உடல்களை அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.