tamilnadu

img

ஆஸ்திரேலியா காட்டுத்தீ - 2 மாநிலங்களில் அவசர நிலை அறிவிப்பு

ஆஸ்திரேலியாவின் நியூ சவூத் வேலஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் பற்றி எரியும் காட்டுத்தீ காரணமாக அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாள்களாக எரிந்து வரும் காட்டுத்தீயால் பல லட்சம் ஏக்கர் காடுகளும், விவசாய நிலங்களும், 159 வீடுகளும் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், நியூ சவூத் வேலஸ் மாநிலத்தில் 60க்கும் மேற்பட்ட இடங்களிலும், குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 45க்கும் மேற்பட்ட இடங்களிலும் காட்டுத்தீ பற்றி எரிகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் ஆயிரக்கணக்கான தீயாணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நியூ சவூத் வேலஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

;