tamilnadu

img

இறந்து கரை ஒதுங்கிய 100க்கும் மேற்பட்ட டால்ஃபின்கள்!

ஆப்பிரிக்காவின் கேப் வெர்டேவில் உள்ள கடற்கரையில் 100க்கும் மேற்பட்ட டால்ஃபின்கள் உயிரிழந்து கரை ஒதுங்கியது, அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆப்பிரிக்காவின் கேப் வெர்டேவில் உள்ள போவா விஸ்டா தீவின் கடற்பகுதியில், 100க்கும் மேற்பட்ட டால்ஃபின்கள், உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கின. இந்த டால்ஃபின்கள் உயிரிழந்ததற்கான காரணம் மர்மமாக இருந்து வருகிறது. எனவே கரை ஒதுங்கியடால்ஃபின்களின் உடற்கூறுகளை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை, 134 மெலன் தலை வகை டால்ஃபின்கள் இறந்து கரை ஒதுங்கியதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக, உடல் நலக் கோளாறு, திடீர் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட  காரணங்களால் டால்ஃபின்கள் உயிரிழக்க நேரிடும் எனவும், டால்ஃபின்கள்  கடலில் திசைமாறி செல்லும்போதோ, வேட்டையாடப்படும்போதோ கூட இம்மாதிரியான சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.