tamilnadu

img

காபூல் குண்டு வெடிப்பில் சிக்கி 68 பேர் பலி


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 68 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் பாதுகாப்புத்துறை அலுவலகம், கால்பந்து மற்றும் கிரிக்கெட் வாரியங்கள் அமைந்துள்ள பகுதிகளில் இன்று குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது என்று ஆப்கான் அமைச்சக செய்தித்தொடர்பாளர்கள் வஹிதுல்லா மாயார் மற்றும் நஸ்ரத் ரஹிமி ஆகியோர் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த குண்டு வெடிப்பு தாக்குதல்களில் இதுவரை 68 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக காந்தஹார் மாகாணத்தில் அரசுக் கட்டடம் ஒன்றை குறிவைத்து தாலிபன் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 11 காவல்துறையினர் 8 தேர்தல் பணியாளர்கள் என 19 பேர் உயிரிழந்தனர்.