நைஜீரியாவில் கிராம மக்கள் மீது போக்கோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 65 பேர் பலியாகி உள்ளனர்.
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் போர்னோ மாவட்ட தலைநகரான மைடுகுரி நகரை ஒட்டியுள்ள கிராமத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சவ ஊர்வலம் நடந்து கொண்டு இருந்தது. அப்போது, ஊர்வலத்தின் மீது போக்கோ நடந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 65 பேர் கொல்லப்பட்டனர்.
முதல்கட்ட தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டதாகவும், பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் மேலும் 42 பேர் கொல்லப்பட்டதாகவும், 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.