கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் விசாக்களை பெறுவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
கிழக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் விசாக்களைப் பெறுவதற்காக ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் செவ்வாயன்று கூடியுள்ளனர். கூட்ட நெரிசல் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர் என கிழக்கு ஜலாலாபாத் நகரில் உள்ள மாகாண சபை உறுப்பினர் சோஹ்ராப் காதேரி கூறியுள்ளார்.
விசாவிவை பெறுவதற்கும், புதிய விசாவிற்கு விண்ணப்பிக்க தேவையான டோக்கன்களை சேகரிக்க சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியிருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாக இரண்டு மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடனடியாக காவல்துறை அதிகாரிகளை வைத்து கூட்ட ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகள் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.