ஆப்கானிஸ்தானில் அரசு அலுவலகம் அருகில் குண்டு வெடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் உள்ள அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகம் அருகில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. ஷஹர் இ நாவ் பகுதியில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் காபூலில் உள்ள தொலைத்தொடர்பு துறையின் முன் தீவிரவாதி ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.