ஆந்திராவில் காதலித்து ஏமாற்றிய காதலன் மீது காதலி ஆசிட் வீச்சு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பெத்த பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகேந்திராசும் சுப்ரியாவும் 3 ஆண்டுகாளாக காதலித்து வந்தனர். ஆனால் நாகேந்திராவின் பெற்றோர் கடந்த மாதம் வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சுப்ரியா இன்று காலை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நாகேந்திரா மீது ஆசிட் வீசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து படுகாயம் அடைந்த நாகேந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.