ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஓ என் ஜி சி க்கு சொந்தமான எரிவாயுக் குழாயில் 40 மணி நேரத்திற்கு மேலாக வாயு கசிந்துக் கொண்டுள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உப்பிடி கிராமத்தில் ஓ என் ஜி சி நிறுவனத்துக்குச் சொந்தமான எரி வாயுக் குழாய் செல்கிறது. அந்த குழாயில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக கடந்த 40 மணி நேரத்திற்கும் மேலாக எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. ஓ என் ஜி சி நிபுணர்கள் தொடர்ந்து பணியில் உள்ள போதிலும் இந்த வாயுக் கசிவு துளையை அடைக்க முடியாமல் திணறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.