tamilnadu

img

ஆந்திரா சாலைவிபத்தில் சிக்கி 7 பேர் பலி

ஆந்திராவில் சாலை விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தாந்தி  கொண்டா அருகே மலையில் வேன் சென்று கொண்டிருந்த போது பிரேக் செயலிழந்ததால்  பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயம் அடைந்த 10 பேர் ராஜமஹேந்திரவரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்தது சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.