tamilnadu

img

இந்நாள் ஆகஸ்ட் 25 இதற்கு முன்னால்

1814 - இங்கிலாந்துப் படைகளின் வாஷிங் டன் எரிப்பு நடவ டிக்கையின் ஒரு பகு தியாக, அமெரிக்க அரசின் கருவூலம், பாராளுமன்ற நூலகம், போர்த்துறை அலுவலகம் உள்ளிட்ட அமெரிக்க அரசுக் கட்டிடங்கள் எரிக்கப்பட்டன. அமெரிக்காவுக்கும், இங்கிலாaந்துக்குமிடையே 1812-15 காலத்தில் நடைபெற்ற 1812ஆம் ஆண்டுப்போரின் ஒரு பகுதியாக இந்த எரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நெப்போலியப் போர்களின்போது, பிரான்ஸ் மற்ற நாடுகளு டன் வணிகத்தில் ஈடுபடுவதைக் கடற்படை முற்றுகையின் மூலம் இங்கிலாந்து தடுத்ததை, பன்னாட்டுச் சட்டங்க ளின்படி தவறு என்று அமெரிக்கா எதிர்த்தது. இந்நிலை யில், அமெரிக்க வணிகக் கப்பல்களின் மாலுமிகளைப் பிடித்து, ஆள் பற்றாக்குறையிலிருந்த தங்கள் கடற்படைக் கப்பல்களில் பணியாற்ற இங்கிலாந்து வற்புறுத்தியது. அமெரிக்கக் கப்பல்களை இங்கிலாந்துக் கடற்படைக் கப்பல்கள் வலுச் சண்டைக்கு இழுத்த இரு நிகழ்வுகள் 1807இலும், 1811இலும் நடைபெற்றமையும், அமெரிக்க மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. அமெரிக்காவின் எல்லைப்புறங்களிலி ருந்த பூர்வகுடிகளுக்கு இங்கிலாந்து நிதியும், ஆயுதங்களும் அளித்து, அமெரிக்காவுடன் மோதல்களை ஏற்படச்செய்தது. இவற்றால் எரிச்சலுற்ற அமெரிக்கா, இங்கிலாந்தின் கட்டுப் பாட்டிலிருந்த வடஅமெரிக்க (தற்போதைய கனடா) குடி யேற்றங்களைக் கைப்பற்ற முயற்சித்தது. இண்டியானா, இல்லினாய்ஸ், மிச்சிகன், விஸ்கான்சின் முதலான பகுதி களில் அமெரிக்காவின் விரிவாக்க முயற்சிகள், பூர்வகுடி களுக்கு இங்கிலாந்து செய்த உதவிகளால் தடைப்பட்டன.

இவற்றால், 1812இல் அமெரிக்கா போரை அறிவித்தது. நெப் போலியப் போர்களில் இங்கிலாந்தின் அணுகுமுறையின் விளைவாக ஏற்பட்டதால், நெப்போலியப் போர்களில் ஒரு பகுதியாகவும் இது குறிப்பிடப்படுவதுண்டு. இங்கிலாந்தின் படைகளில் பெரும்பகுதி நெப்போலியப் போர்களில் ஈடுபட்டி ருந்ததால், அமெரிக்கப் படை குறிப்பிடத்தகுந்த அளவுக்கு வலுவாகவெல்லாம் இல்லாவிட்டாலும் போர் தொடர்ந்து கொண்டே இருந்தது. 1814 ஏப்ரலில் நெப்போலியன் முறி யடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவின்மீது இங்கி லாந்து கவனம் செலுத்தியது. போதுமான பாதுகாப்புப் படை கள் இல்லாத தலைநகரை இங்கிலாந்துப் படைகள் ஆகஸ்ட் 24இல் எளிதில் கைப்பற்றின. குடியரசுத்தலைவர் மாளிகையிலி ருந்து(அப்போது வெள்ளை மாளிகை இல்லை!) குடியரசுத் தலைவர் ஜேம்ஸ் மேடிசன் உடைமைகளுடன் தப்பிச் செல்லவேண்டியதாயிற்று. குடியரசுத்தலைவர் மாளிகை யில் புகுந்த இங்கிலாந்துப் படையினர் அங்கு நிதானமாக விருந்துண்டபின், அதனைத் தீக்கிரையாக்கினர். 26 மணிநேரமே நீடித்த இந்த ஆக்கிரமிப்பு, இரண்டு பீரங்கி களைத் தூக்கிச்செல்லுமளவுக்கு வீசிய சூறாவளியால், இங்கிலாந்துப் படை ஓடியதைத்தொடர்ந்து முடிவுக்கு வந்தது. 1814 டிசம்பரில் ஏற்பட்ட கெண்ட் ஒப்பந்தத்துடன், யாருக்கும் வெற்றி தோல்வியின்றி போரும் முடிவுக்கு வந்தது. - அறிவுக்கடல்