அருமனை:
நகர்புற வேலைவாய்ப்பு அமல்படுத்தக் கோரி அருமனைபேரூராட்சியில் மனு கொடுக்கும்போராட்டம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. வர்க்கீஸ்தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க வட்டார செயலாளர் பி.சசிகுமார், மார்க்சிஸ்ட் கட்சி அருமனை வட்டார செயலாளர் சி.சசிகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி ஆகியோர் பேசினார்.ஏராளமானோர் கலந்து கொண்டுவேலை கேட்டு மனுக்கள் கொடுத்தனர்.