அரியலூர், ஆக.8- காஷ்மீரை பிரித்து அரசியல் சட்ட உரிமைகளை பறித்த மத்திய அரசை கண்டித்து அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டத்தில் காந்தி பூங்கா முன்பு புதன்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலாளர் மணிவேல், ஜெயங்கொண்டம் ஒன்றியச் செய லாளர் வெங்கடாச்சலம், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் மகாராஜன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் துவங்கி நடந்து கொண்டிருந்த நிலையில், தன்னார்வலர் கமலக்கண்ணன் மற்றும் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என அனைவரும் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர். இச்சூழலில் மக்க ளின் எண்ணிக்கை அதிகரித்ததை பொறுத்துக் கொள்ளாத காவல்துறையினர், ஆர்ப்பாட்டத்தை நிறுத்துங்கள் என கூறினர். அதற்கு சிபிஎம் தலைவர்கள், ‘நாங்கள் முறை யாக அனுமதி பெற்று ஜனநாயக முறைப்படிதான் ஆர்ப் பாட்டம் செய்கிறோம். ஏன் எங்களை இவ்வாறு நடத்து கிறீர்கள்’ என்று கேட்டதற்கு, மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டினார். பின்னர் அனைவரையும் கைது செய்து ஜெயங்கொண் டம் காவல் நிலையத்தில் வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்ன துரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.இளங்கோ வன், கே.மகாராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.பத்மாவதி, இளவரசன், ஒன்றியச் செயலாளர்கள் வெங்க டாச்சலம், ராதாகிருஷ்ணன், பரமசிவம், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி ஜெயங்கொண்ட ஒன்றியச் செயலாளர் ராம நாதன், திராவிட கழக மண்டல தலைவர் எஸ்.காமராஜ், காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவர் ஜி.ராஜேந்திரன், தமுமுக மாவட்டச் செயலாளர் சாகுல்அமீது, தன்னார்வ லர் கமலக்கண்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.