அரியலூர், மார்ச் 23- அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி, நெல்லிப்பிரியர், பெரிய திருக்கோணம் ஆகிய வரலாற்று பகுதி மற்றும் முத்து வாஞ்சேரி, ஸ்ரீபுரந்தான், கொள்ளிடம் ஆற்றுப் படுகைகளை குறிவைத்து மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெறுகிறது. முக்கிய சாலை பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள்பொருத் தப்பட்டும் மணல் கடத்தலை அதிகாரிகள் கண்டுகொள்வ தில்லை என மக்கள் தொடர் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மணல் கொள்ளையில் ஈடுபடுவோரை பிடிக்க சுண்டக்குடி கிராம இளைஞர்கள் 25-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு சனிக்கிழமை அன்று இரவு மற்றும் பகலில் மணல் கடத்திய வாகனங்களை சிறைபிடித்த னர். வெளிப்பார்வைக்கு தேங்காய் மட்டை மூட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் போல் தோற்றமளிக்கும் நிலையில் செய்து மணல் கடத்தலில் ஈடுபடுகின்றனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களின் வற்புறுத்தல் காரணமாக மணல் லாரிகளை பறிமுதல் செய்தனர். ஆனால் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை எனத் தெரிகிறது. ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிலர் இந்த மணல் கடத்தலில் தொடர்பு கொண்டுள்ள தால் அதிகாரிகளும், காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர் என பொது மக்கள் கூறினர். மணல் கடத்தலில் ஈடுபடுவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என மக்கள் கூறினர்.