கோவை, ஆக. 13- கோவை அரசு மருத்துவக் கல்லூரி யில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச் சர் விஜயபாஸ்கர், துறை ரீதியான கேள்வி களுக்கு பதிலளிக்கத் தெரியவில்லை எனக் கூறி அங்குள்ள செவிலியர் கல்லூரி பொறுப்பு முதல்வருக்கு மெமோ அளித்தார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீமோகாக்கல் எனப்படும் தடுப்பூசி போடும் நிகழ்ச்சி, உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்பு ணர்வு பேரணி, ரத்தநாள அறுவை சிகிச்சை பிரிவு துவக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சி கள் நடைபெற்றன. இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் ராசாமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், நாட்டிலேயே முதல் முறை யாக ஒன்றரை கிலோவுக்கும் குறைவான எடை கொண்ட பச்சிளம் குழந்தைகளுக்கு “நீமோகாக்கல்” தடுப்பூசி அரசு மருத்துவ மனைகளில் இலவசமாக போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.
முன்னதாக செவிலியர் பயிற்சிக் கல்லூரி மூன்றாமாண்டு மாணவிகளிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துரையாடி னார். அப்போது பிரசவ வார்டுகளில் நடந்து கொள்ள வேண்டிய விதம், பச்சிளம் குழந் தைகளை கையாள வேண்டிய விதம், அம்மா திட்டம் மூலம் விலையில்லா பொருட்கள் என்னென்ன வழங்கப்படு கின்றன உள்ளிட்டவை குறித்து பல்வேறு கேள்விகளை அமைச்சர் மாணவிகளிடம் எழுப்பினார். அப்போது, பெரும்பாலான மாணவிகள் பதிலளிக்க முடியாமல் திணறியுள்ளனர். இதனையடுத்து செவிலியர் கல்லூரி பொறுப்பு முதல்வர் தனலட்சுமியிடமும் அமைச்சர் விஜயபாஸ்கர் சில கேள்வி களை எழுப்பியதாகவும் அதற்கு அவ ருக்கும் பதிலளிக்கத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கேயே உடனடியாக அவருக்கு அமைச்சர் “மெமோ” வழங்கினார்.