tamilnadu

img

சிபிஎம் ஆர்ப்பாட்டம்

 அரியலூர், அக்.22- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம், அரியலூர் ஒன்றியச் செய லாளர் துரை அருணன் தலைமையில் நடைபெற்றது. கோரிக்கையை வலியுறுத்தி ஒன்றியக்குழு உறுப்பினர் கே. கிருஷ்ணன் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.இளங்கோவன், மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் வெங்கடாஜலம், தா.பலூர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், செந்துறை ஒன்றிய செய லாளர் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.