அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நிதியளிப்பு விழா நடைபெற்றது. வட்டச் செயலாளர் பரமசிவம் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.இளங்கோவன், மகாராஜன், மாவட்டக் குழு உறுப்பினர் இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்சி வளர்ச்சி நிதி அளிக்கப்பட்டது. அருணாச்சலம் நன்றி கூறினார்.