சென்னை, அக். 5- ஆயுத பூசை, விஜயதசமியை யொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடு முறை விடப்பட்டுள்ளது. இதனால் அரசு பணியில் உள்ள பெரும்பாலா னோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி விட்டனர். பண்டிகை நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆயுத பூசையை முன்னிட்டு முதன் முத லாக சென்னை மட்டுமின்றி தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமை வரை 3,155 பேருந்துகள் இயக்கப்பட்டன. வழக்கமாக செல்லும் 2,225 பேருந்து களுடன் 930 சிறப்பு பேருந்துகளும் புறப்பட்டு சென்றன. இந்த பேருந்து கள் மூலம் 1 லட்சத்து 80 ஆயி ரத்து 375 பயணிகள் பயணம் செய்துள்ளனர். எதிர்பார்த்ததைவிட கூட்டம் குறைவாக இருந்ததால் சிறப்பு பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை. தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப் பட்டு செல்வதால் அனைத்து பிளாட் பாரங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.