tamilnadu

img

கொரோனா சிகிச்சைக்கான புதிய கண்டுபிடிப்பு - அமெரிக்க வாழ் இந்திய சிறுமிக்கு பரிசு 

உலகம் முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பல்வேறு மருத்துவக்குழுக்களும், பெரிய பல்கலைக்கழகங்களை முனைப்புடன் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில், கொரோனா சிகிச்சை தொடர்பான புதிய கண்டுபிடிப்பிற்காக அமெரிக்காவில் உள்ள இந்திய சிறுமிக்கு 25 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசளிக்கப்பட்டுள்ளது.

டெக்சாஸ் பகுதியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார் அனிகா செப்ரோலு. இவர் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான புதிய சிகிச்சை முறையை கண்டறிந்து இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். தொற்றானது ஒரு குறிப்பிட்ட புரதத்துடன் பிணைக்கக்கூடிய மூலக்கூற்றை உருவாக்கி உள்ளதாகவும், இதன் மூலம்  கொரோனா தொற்று புரத செயல்பாட்டை நிறுத்தி தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என சிறுமி அனிகா செப்ரோலு தெரிவித்துள்ளார். இதற்காக அவருக்கு 25 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசும் பெற்றுள்ளார்.