கூகுள் நிறுவனம் தனது பணியாளர்களை வரும் ஜூன் 2021 வரை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதித்துள்ளது.
சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா பாதிப்பு இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்த படியே பணியாற்ற அனுமதி அளித்துள்ளன. இதேபோல் கூகுள் நிறுவனமும் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்த படியே பணியாற்ற அனுமதித்தது. இந்நிலையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான அல்பாட் -டின் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை நிறுவனத்தின் முக்கிய குழு செயல் உறுப்பினர்களுடன் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து 2021 ஜூன் வரை அனைத்து ஊழியர்களும் வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதி வழங்குவது என்று முடிவெடுத்து அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தற்சமயம் பணியாளர்கள் வீட்டில் இருந்த படியே வேலை செய்ய முடியும் என்ற நிலையில் உள்ளவர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றும் காலத்தை வரும் ஜூன் 2021 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.