அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ளது ஹூஸ்டன் நகரில் ஹாரிஸ் கவுண்டியின் காவல்துறை அதிகாரியாக இருந்தவர் சந்தீப் சிங் தலிவால். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு சீக்கியர் ஆவார். இவர் நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, கார் ஒன்றை நிறுத்தி விசாரித்துவிட்டு, தனது வாகனத்திற்கு திரும்பி சென்றபோது, காரில் இருந்து வெளியே வந்த அந்த நபர் சந்தீப் சிங்கை பின்புறம் இருந்து சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் சந்தீப் சிங்கை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அவர் முன்னதாக இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குற்றவாளியின் காரில் உள்ள டேஷ் கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் குற்றவாளி போலீசார் பிடிபட்டுள்ளார். விசாரணையில் அவர் பெயர் ராபர்ட் சோலிஸ் எனவும், இவர் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்துள்ளது.