tamilnadu

வாலிபர் அடித்துக் கொலை

காரியாபட்டி, மே 27- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ளது பி.பொ துப்பட்டி. இப்பகுதியைச் சேர்ந்த  செந்தில்குமாருக்கும் அதே பகு தியைச் சேர்ந்த கலைச்செல்வி க்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவ ருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்படவே, பிரிந்து வாழ்ந்து வரு கின்றனர். கலைச்செல்வி காரியா பட்டியில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்தாராம். இந்த நிலையில், அங்கு சென்ற செந்தில்குமார், கலைச்செ ல்வியிடம் தகராறு செய்தாராம். தக வலறிந்து கலைச்செல்வியின் சகோ தரர்கள் கணேசமூர்த்தி, ஆனந்த குமார், செல்வக்குமார் ஆகியோ ர்அங்கு வந்துள்ளனர். இதைய டுத்து, மூவரும் சேர்ந்து செந்தில்கு மாரை தாக்கியதாக கூறப்படுகி றது. இதில் படுகாயமடைந்த அவர்,  மதுரையில் உள்ள அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இந்நி லையில், சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த  காரியாபட்டி போலீசார் சகோத ரர்கள் மூவரையும் கைது செய்தனர்.