tamilnadu

img

பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி சிறுவன் மரணம்

விழுப்புரம், ஜூன் 2-விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தில் வசிக்கும் மாயவேல் என்பவரின் மகன் முகுந்தன் (7). சிறுவனை, திருவெண்ணெய்நல்லூரி லுள்ள போன் நேரு என்ற தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 2ஆம் வகுப்பில் பெற்றோர்கள் சேர்த்தனர். பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3ந்தேதிதிறக்கப்படும் எனதமிழக அரசு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசின் உத்தரவை மதிக்காமல், ஜூன் 1ஆம் தேதியே போன் நேரு பள்ளி திறக்கப்படும் எஎன அதன் நிர்வாகி அறிவித்திருந்தார். அதன்படி பள்ளி திறக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, பள்ளி முடித்து சிறுவன் முகுந்தன், பள்ளி வேனில், சிறுமதுரையில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.  பிறகு வீட்டிற்கு வந்தபோது, வேனிலிருந்து இறங்கிய போது, புத்தகப் பை கதவில் சிக்கியுள்ளது. இதில் தடுமாறிய முகுந்தனை கவனிக்காமல் ஓட்டுநர் வேனை இயக்கியுள்ளார். இதில் முகந்தன் கீழே விழுந்தபோது, வேனின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கியது. அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். வேன் ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவை மீறி விடுமுறை காலங்களில் செயல்படக்கூடாது என்பதுபோன்ற பல்வேறு எச்சரிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டு இருந்தாலும் ஒரு சிறிய அளவுகூட இவற்றை தனியார் பள்ளி நிர்வாகங்கள் மதிப்பதில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது. தனியார் பள்ளிகளின் கட்டுப்பாட்டில்தான் கல்வித்துறை அதிகாரிகள் சிக்கி உள்ளனர் என்பதும் இச்சம்பவம் மூலம் வெளியாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.