விழுப்புரம், மே 11 - விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம், கண்டாச்சிபுரத்தை அடுத்த நல்லாப் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு ஜீவா என்கிற மாணவன் 4ஆம் வகுப்பு பயின்று வருகிறான்.அவனது தந்தை அய்யனார் விபத்தில் சிக்கி சென்னையில் ராஜிவ் காந்தி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி மே. 8 அன்று உயிரி ழந்தார். மாணவரின் தாயார் தனம், பாட்டி முனி யம்மா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பதால் அவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்ள்ளனர். இதனால் அந்த மாண வன் தனிமையில் தவித்து வந்தான் இதையறிந்த விழுப்புரம் மாவட்ட முதன் மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி பள்ளிக் கல்வித் துறை சார்பில் அந்த மாணவனுக்கு உடை, அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை யும், உதவி தொகையையும் வழங்கினார். மேலும், பள்ளி திறந்தவுடன் மாண வனுக்கு அரசின் அனைத்து நலத்திட்ட உதவி களும் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.