tamilnadu

img

கொரோனா தடுப்பு பணி கேட்கும் மக்கள் நலப்பணியாளர்கள்

விழுப்புரம், ஜூன் 30- விழுப்புரம் மாவட்டத்தில்  கொரோனா தடுப்பு பணியில் தங்களை ஈடுபடுத்த வேண்டுமென பணியிழந்த மக்கள் நலப்பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மக்கள் நலப்பணியாளர் மறுவாழ்வு சங்கத்தின் மாநிலத் தலை வர் இரா.தன்ராஜ் தலைமை யில் மாவட்ட  அலுவலகத் தில் மனு அளித்தனர். அதன்  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 13 ஆயிரதது 500 பேர் மக்கள் நலப்பணியாளர்களாக வேலை செய்து வந்தனர். ஊரக வளர்ச்சித் துறையின்  கீழ் தற்காலிக அடிப்படை யில் 10 முதல் 25 ஆண்டுகள் வரை பலர் வேலை செய்து வந்த நிலையில், 2011ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்  யப்பட்டனர். இதில் விழுப்பு ரம் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரத்து 90 பேர் வேலை இழந்தனர் என்றார். தற்போது கொரோனா வைரஸ் நோய் பரவல் அதி கரித்து வரும் நிலையில், சுகா தாரத்துறை, தூய்மைப் பணி யாளர்கள் என பலர் களப் பணியாற்றி வருகின்றனர். இவர்களுடன், நோய் தடுப்பு  பணியில் மக்கள் நலப்பணி யாளர்களையும் ஈடுபடுத்த அரசு அனுமதிக்க வேண்டும்.  சேவை அடிப்படையில் பணி யாற்ற தயாராக உள்ளோம் என்றும் அவர் கூறினார்.