tamilnadu

மதுபோதையால் விபரீதம்  தங்கையை கொலை செய்த அண்ணன் கைது

 திருச்சுழி, மே .9- திருச்சுழி அருகே மது போதையில் உடன் பிறந்த சகோதரியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அண்ணனை போலீசார் கைது  செய்தனர்.  விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள கீழக்கண்ட  மங்கலத்தைச் சேர்ந்த வீரபாண்டி இவரது மனைவி சந்திர மதி. இவர்களுடைய மகன் கணேஷ் பாபு (23).லாரி டிரைவராக  வேலை செய்து வருகிறார். அவரது தங்கை அம்சவள்ளி (20) ராஜ பாளையத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு  படித்து வந்த நிலையில், அவரும் அதே ஊரைச் சேர்ந்த முருகேச  பாண்டி என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இத னால் கணேஷ்பாபு தனது தங்கையை கண்டித்துள்ளார். இருப்பி னும் தங்கை அம்சவள்ளி காதலனை கைவிட மறுத்தாராம்.  இந்நிலையில், மதுபோதையில் வந்த கணேஷ் பாபு,  தங்கை அம்சவள்ளியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். வாக்கு வாதம் முற்றிய நிலையில் கணேஷ் பாபு, அம்சவள்ளியைக் கட்டையால் கொடூரமாக தாக்கியதில் பலத்த காயம் அடைந்த  அம்சவள்ளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிய கணேஷ்பா புவை திருச்சுழி இன்ஸ்பெக்டர் மூக்கன் தலைமையிலான போலீ சார், திருச்சுழி அருகே காட்டுப் பகுதியில் தலைமறைவாக இருந்த  கணேஷ் பாபுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.