tamilnadu

ரயில் மூலம் தண்ணீர்: ஐசிஎஃப் அருகே அதிகாரிகள் ஆய்வு

 ஜோலர்பேட்டை, ஜூன் 22- வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து ரயிலில் கொண்டு வரப்படும் தண்ணீர், ஐசிஎஃபில் இருந்து கீழ்பாக்கத்திற்கு குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக ஜோலார்பேட்டையில் இருந்து  ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக சென்னை கோட்ட ரயில்வே அதிகாரி கள் மற்றும் சென்னை குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகள் ஐசிஎஃப் அருகே ஆய்வு மேற்கொண்டனர். அங்கு ஏற்கனவே போடப்பட்டி ருக்கும் பைப் லைன்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனையடுத்து ரயிலில் கொண்டுவரப்படும் குடிநீர், தண்டவாளம் அருகே பொருத்தப்பட்டுள்ள குழாயின் மூலம் அங்கிருந்து கீழ்பாக்கத் தில் உள்ள நீர் ஏற்றம் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர்  லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரி வித்தனர். இதே போல வேலூரிலும், மேட்டுசக்கரகுப்பம் பகுதியில் இருக்கும் காவேரி கூட்டு குடிநீர் தரைத்தோட்டியில் இருந்து குழாய்கள் அமைத்து  ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வருவது சாத்தியமா என்பது குறித்து சென்னை மெட்ரோ நிர்வாக அதிகாரிகள், குடிநீர்  வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.