tamilnadu

img

ஐடி ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் வேலையிழப்பு

ஐடி சங்க அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழு கண்டனம்

சென்னை,நவ.8- ஆயிரக்கணக்கான ஐடி ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவதற்கு நிர்வாகங்களுக்கு ஐடி சங்க அகில இந்திய ஒருங்கிணைப்புக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து தேசிய ஒருங்கி ணைப்பாளர். கே.சி,கோபிகுமார் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- இந்திய ஐ.டி பெரும் நிறுவ னங்களான காக்னிசன்ட், இன்ஃ போசிஸ் மற்றும் கேப்ஜெமினி ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்து  லாபமடைந்து வரும் நிறுவனங்க ளாகும். இருப்பினும் தனது லாபத்தை அதிகப்படுத்திக் கொள்ளும் விதமாக தனது நிறு வனங்களில் பணி புரியும் நடுத்தர மற்றும் மூத்த ஊழியர்  களை வேலையிழப்பு செய்யும் நட வடிக்கைகளில் இறங்கியுள்ளது.  இந்த மாதம் முதல் தேதியி லிருந்து காக்னிசன்ட் தலைமை நிர்வாகி வேலையிழப்பு பற்றிய  தகவலை தனது 3000-க்கும் மேற் பட்ட தமிழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவித்துள்ளது. அதே போன்று இன்ஃபோசிஸ் நிறுவனம் 10 விழுக்காடு ஊழி யர்களை வீட்டுக்கு அனுப்பப் போவதாக தெரிவித்துள்ளது. மேலும் இதே திசை விழியில் பிரான்ஸ் நாட்டின் கேப்ஜெமினி நிறுவனமும்  தனது இந்திய ஊழி யர்களில் 500 ஊழியர்களை வேலையிழப்பு செய்வதாக அறி வித்துள்ளது.  

ஐ.டி. மேஜர்களின் இந்த செயல் இந்திய தொழிலாளர் நல சட்டத்திற்கு எதிரானது மற்றும் அது சட்ட விரோதமானது. ஆனால், இந்த ஊழியர்கள் விரோத நடவடிக்கைகளை தட்டி  கேட்க வேண்டிய இந்திய அரசு  மற்றும் தமிழக அரசும் மவுன மாக இருக்கிறது.  இந்த நிறுவனங்கள் 2019-20-ன்  முதல் காலாண்டில் அதிக நிதி  லாபங்களைப் பதிவு செய்துள் ளது என்பது குறிப்பிடத்தக்கது. லாபமிட்டியிருந்தும் தனது ஊழி யர்களை தேவையற்ற பணி நீக்கம் செய்து வருகின்றது என்பது அந்த நிறுவனங்களின் லாப பசி மற்றும் ஊழியர்களை சுரண்டும் தன்மையை சுட்டிக் காட்டுவதாக உள்ளது.    கடந்த ஆண்டு தமிழகத்தில் வெரிசான் நிறுவனம் பெரிய அள வில் தனது ஊழியர்களை பணி  நீக்கம் செய்தது இதன் மீது தமிழ கத்தை சார்ந்த யூனியன் ஆப் ஐடி  ஐடிஇஎஸ் எம்ப்ளாயிஸ் தொழி லாளர் அலுவலகத்தில் தொழிற் தாவா எழுப்பியது. அதே போன்று தற்போது தமி ழகத்தில் கேரளா, கொல்கத்தா  மற்றும் கர்நாடகா ஆகிய மாநி லங்களில் உள்ள ஐடி சங்கங்கள்  நிர்வாகத்தின் இத்தகைய நடவ டிக்கைகளை எதிர்த்து கண்டனம் தெரிவித்து இயக்கங்கள் நடத்தி வருகின்றனர்.  ஐடி நிர்வாகங்களின் இந்த அராஜக போக்கை ஐ.டி மற்றும் ஐ.டி.இ.எஸ் ஊழியர்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும்,  மத்திய-மாநில அரசுகள்  இந்த பிரச்சனைகள் மீது உடனடி யாக தலையிட்டு ஐடி நிறுவ னங்கள் இந்த நடவடிக்கையை கைவிட வேண்டுமென ஐடி நிறு வனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் அமைப்புக்கு அறிவு றுத்த வேண்டும். எந்த ஊழியரை யும் வேலை நீக்கம் மற்றும் வேலை யிழப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது. இவ்வாறு அந்த அறிக்கை யில் அவர் தெரிவித்திருக்கிறார்.