வேலூர், மே 9- தீக்கதிர் வேலூர் மாவட்ட செய்தியாளர் கே. ஹென்றி லாசரஸ் அவர்களின் தாயார் பூஷணம் உடல் நலக்குறைவு காரணமாகப் புதன்கிழமை(மே8) இரவு காலமானார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.காசிநாதன், எம்.பி. ராமச்சந்திரன், பி.காத்தவராயன், ப.சக்திவேல், செ.ஏகலைவன் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜி.நரசிம்மன், தா.வெங்கடேசன், எஸ்.செல்வம், சி.எஸ்.மகாலிங்கம், கே.ஜெ.சீனிவாசன் உள்ளிட்ட பலர் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.அன்னாரின் உடல் ஆற்காடு சிஎஸ்ஐ சர்ச்சிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தாலுகா அலுவலகம் அருகிலுள்ள கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.