உத்தரபிரதேச மாநிலத்தில் மதிய உணவில் குழம்புக்கு பதில் மஞ்சள் நீர் வழங்கிய அவலத்தை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சிதாபுர் மாவட்டத்தில் விச்பாரியா கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவிற்கு குழம்பிற்கு பதில் மஞ்சள் கலந்த தண்ணீர் வழங்கப்பட்டது. இதுகுறித்த வீடியோ செய்தி வெளியாகிசமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில் வீடியோவை பதிவு செய்த செய்தியாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு வழங்கியது சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.