தூத்துக்குடி ஆக 27 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஒரு நபர் ஆணையத்தின் 14ஆம் கட்ட விசாரணை செவ்வாயன்று தொடங்கியது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது. அந்த ஆணையம் தூத்துக்குடி மற்றும் சென்னையில் தனி அலுவலகம் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஒரு நபர் ஆணையத்தின் 14ஆம் கட்ட விசாரணை செவ்வாயன்று தொடங்கியது. அதன் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் முன் ஆஜராகும்படி, 28 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை, தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையம் இதுவரை ஒரு மருத்துவர் உள்பட 366 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது.