திருநெல்வேலி, ஜூன் 9- நெல்லை மாவட்டபீடித் தொழிலா ளர் சங்கம் ஆலங்குளம் வட்டார பேர வைக்கூட்டம் தலைவர் பி.எஸ்.மாரி யப்பன் தலைமையில் நடைபெற்றது பேரவை கூட்டத்தை சங்க மாவட்டதலைவர் ம.ராஜாங்கம் துவக்கி வைத்து பேசினார் சங்க செய லாளர் மகா விஷ்னு வேலைஅறிக்கை மற்றும் அடுத்த கட்ட இயக்கம் சம்மந்த மாக பேசினார். மாவட்ட பொருளாளர் ஆரியமுல்லை, சிபிஎம் தாலுகா செய லாளர் வி.குணசீலன் வாழ்த்தி பேசி னர். சங்க மாவட்ட பொதுச்செய லாளர் எம்.வேல்முருகன் நிறைவுரை யாற்றினார் .கூட்டத்தில் புதிய வட்டார நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வட்டார தலைவராக பி.எஸ்.மாரி யப்பன், செயலாளராக மகாவிஷ்னு, பொருளாளராக பரமசிவன் மற்றும் 4 துணை தலைவர்கள் ,4 துணை செய லாளர்கள் தேர்ந்தெடுக்கபட்டனர். கூட்டத்தில் பீடித்தொழிலாளர் களுக்கு தரமான இலை வழங்க வேண் டும் 1-4-2019 முதல் பஞ்சபடி உயர்வு ரூ.6.06 அரியர்ஸ்வுடன் வழங்க தொழி லாளர்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் ஆலங்குளம் வட்டாரபகுதியில் இலவச வீட்டுமனை கேட்டு மனு கொடுத்த வர்களுக்கு உடனே இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட கோரி 19-6-2019 காலை10 மணிக்கு ஆலங்குளம் தாலுகா அலுவலகம் முன்பு பீடித் தொழிலாளர் முறையிடும் போராட் டம் நடத்துவது என முடிவு செய்யப் பட்டது.