tamilnadu

img

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஜூன் 9- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அமைப்பாளர் சா.சின்னசாமி தலைமை வகித்தார். மாவட்டக்குழு த.இரவிச்சந்திரன், இடைநிலை ஆசிரியர் சங்கம் சி.செந்தில்குமார் மற்றும் பல்வேறு சங்க மாவட்ட நிர்வாகிகள் பி.தயாளன், ஆ.ராமர், தபா.சிலம்பரசன், பேராசிரியர் ப.செல்வகுமார், செ.சின்னசாமி, சுப்ரமணி யன், கென்னடி, இலட்சுமணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  அங்கன்வாடி பள்ளியில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்துவதை கைவிட வேண்டும். 8 ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை 

இதே போல் புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து வட்டராங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கீரனூரில் ஆர்ப்பாட்டத்திற்கு குன்றாண்டார் கோவில் வட்டாரத் தலைவர் இரட்சகராஜ் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவர் ஜீவன்ராஜ், இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் மதலைமுத்து, சங்கத்தின் வட்டாரச் செயலாளர் ராஜா, பட்டதாரி ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர் ஜெயராம் உள்ளிட்டோர் பேசினர். திருவரங்குளத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு வட்டராத் தலைவர் என்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநில செயற்குழு உறுப்பினர் பி.அதிசயநாதன், வட்டராச் செயலாளர் வ.செந்தில்குமார், பொருளாளர் எஸ்.டேவிட்லியோ உள்ளிட்டோர் பேசினர். 

சீர்காழி

நாகை மாவட்டம் கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆசிரியர் கூட்டணியின் வட்டாரத் தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். வட்டார செயலாளார் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசியர் சங்க மாநில செயலாளர் அசோக்குமார் கண்டன உரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் நல்லமணி, வட்டார பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.