பொன்னமராவதி, டிச.6- 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொ துத்தேர்வு என்பதை ரத்து செய்ய வேண்டும். புதிய தேசிய கல்வி கொள்கை திரும்பப் பெற வேண்டும். ஜாக்டோ- ஜியோ போராட்டங்களில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது மேற் கொண்டுள்ள ஒழுங்கு நடவ டிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை பொன்னமரா வதியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பெருந்திரள் முறையீடு நடை பெற்றது. இதில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார தலைவர் சீ்.ராஜ கோபாலன் தலைமையில் வட்டார கல்வி அலுவலர்கள் செல்வகுமார், பால் டேவிட் ரொ சாரியோ ஆகியோரிடம் சங்கத் தின் மாநில செயற்குழு உறுப்பி னர் க.முத்துசாமி கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். வட்டார செயலாளர் சி.மணிக் குமார், மாவட்ட துணைச் செயலா ளர் கே.புவியரசு, மாவட்ட பொ துக்குழு உறுப்பினர்கள் மகாலிங் கம், தேவேந்திரன், தேவகுமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் திரளாக பங்கேற்றனர். வட்டார பொருளா ளர் சுப.ஆனந்த் நன்றி கூறி னார்.