tamilnadu

img

தமிழ் வளர்ச்சி பிரச்சாரக் கூட்டம்

திருச்சிராப்பள்ளி, நவ.2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு அமைப்பு தின விழா மற்றும் தமிழ் வளர்ச்சி பிரச்சார கூட்டம் வெள்ளியன்று துவாக்குடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவெறும்பூர் ஒன்றி யக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவராஜ், மல்லிகா, ஒன்றிய செயலாளர் நடராஜன், பெல் இடைக்கமிட்டி செயலாளர் அருள்மொழி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, அருணன் ஆகியோர் பேசினர். மாநிலக்குழு உறுப்பி னர் ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள், கிளை செயலாளர் கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றி யக்குழு உறுப்பினர் ரவிக்குமார் நன்றி கூறினார்.