மாணவர்கள் பங்கேற்க அழைப்பு
புதுக்கோட்டை, நவ.18- புதுக்கோட்டை மாவட்ட பொது நூலகத் துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகள் வட்ட அளவில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட நூலக அலு வலர் அ.பொ.சிவக்குமார் தெரி வித்துள்ளது: மாணவர்களின் வாசிப்பு பழக் கத்தையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் விதமாக வட்ட அளவிலும், மாவட்ட அளவிலும் ‘வாழ்விற்கு உயர்வு தருவது வாசிப்பே’ என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும், ‘வாசித்தேன் வளர்ந்தேன்’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், ‘என் எதிர்காலம் என் கையில்’ என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும் நடத்தப்படவுள்ளது.
புதுக்கோட்டை வட்டத்தை சார்ந்த பள்ளிகளுக்கு புதுக்கோட்டை சந்தை பேட்டை, நகராட்சி நடுநிலைப்பள்ளி யிலும், அறந்தாங்கி வட்டத்தைச் சார்ந்த பள்ளிகளுக்கு அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியி லும், ஆலங்குடி வட்டத்தைச் சார்ந்த பள்ளிகளுக்கு ஆலங்குடி, சந்தைப் பேட்டை, ஊராட்சி ஒன்றிய தொ டக்கப்பள்ளியிலும், ஆவுடையார் கோவில் வட்டத்தைச் சார்ந்த பள்ளி களுக்கு ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யிலும் நடைபெறவுள்ளது. இலுப்பூர் வட்டத்தைச் சார்ந்த பள்ளிகளுக்கு இலுப்பூர் அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளியிலும், கந்தர்வக்கோட்டை வட்டத்தைச் சார்ந்த பள்ளிகளுக்கு கந்தர்வக் கோட்டை அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியிலும், கறம்பக்குடி வட்டத்தைச் சார்ந்த பள்ளிகளுக்கு கறம்பக்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், கீரனூர் வட்டத்தை சார்ந்த பள்ளிகளுக்கு கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், திருமயம் வட்டத்தைச் சார்ந்த பள்ளிகளுக்கு திருமயம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மணமேல்குடி வட்டத்தை சார்ந்த பள்ளிகளுக்கு மணல்மேல்குடி வட்டத்தை சார்ந்த பள்ளிகளுக்கு மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் மற்றம் பொன்னமராவதி வட்டத்தைச் சார்ந்த பள்ளிகளுக்கு பொன்னமராவதி, பொன்-புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் நடை பெறவுள்ளது. 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் 19-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தலைமை ஆசிரியர் அனுமதி கடிதத்துடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். ஒரு போட்டிக்கு ஒரு பள்ளியிலிருந்து ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வட்ட அளவில் முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெறுபவர்களை தேர்ந்தெடுத்து வரும் 25 அன்று புதுக் கோட்டை திருகோகர்ணம் மியூசியம் அருகில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவில் போட்டி நடைபெறும். மாவட்ட அளவில் முதல் மூன்று இடங் களை பெற்றவர்களுக்கு இளம் படைப்பாளர் விருது நூலக வார விழாவில் வழங்கப்படும்.