tamilnadu

img

பாலியல் வன்கொடுமையில் பள்ளி மாணவி கொலை

குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தல்

சீர்காழி, நவ.11- நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா சித்தன் காத்திருப்பு கிராமத்தில் வசிக்கும் தமிழர சன் மகள் ஆசிகா(15). இவர் நாங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு  படித்து வந்தார். இந்நிலை யில் அவர் கடந்த 9-ஆம் தேதி தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்திற்கு சென் றுள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கலியமூர்த்தியின் மகன் கல்யாணசுந்தரம் சிறுமியின் வாயை பொத்தி தூக்கி சென்று அடர்ந்த காட்டுக்குள் வைத்து பாலியல் பலாத்கா ரம் செய்துள்ளார். சிறுமி சத்தம் போட்ட தால் அவரை கழுத்தை நெரித் துள்ளார். மயங்கிய நிலை யில் இருக்கும் போது அந்த சிறுமியை கற்பழித்து கொன்று விட்டு புதரில் போட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறை யினர், ஆசிகா  உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொ டர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரனை  நடத்தி குற்றவாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  இச்சம்பவம் குறித்து  தக வலறிந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வட்டச் செய லாளர் சி.வி.ஆர்.ஜீவா னந்தம், மாணவர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் மாரியப்பன், மாணவர் சங்க கபிலன், அமுல் காஸ்ட்ரோ, குமரேசன், சர்மா, தனுஷ் மற்றும் கட்சியின் சீர்காழி நகர செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் சித்தன் காத்தி ருப்பு கிராமத்திற்கு நேரில் சென்று ஆசிகாவின் தந்தை தமிழரசன் மற்றும் குடும்பத் தாருக்கு ஆறுதல் கூறினர்.  மேலும் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பாதிக் கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலி யுறுத்தி உள்ளனர்.