தரங்கம்பாடி ஜூலை 4- நாகை மாவட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலு வலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் சங்கத்தின் வட்டாரத் தலைவர் மனோ கரன் தலைமையில் நடைபெற்றது. மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் விருப்பமில்லாத பயனாளிகளுக்கும் வீடு கட்ட நிர்பந்திக்கும் போக்கினை கைவிடு, நாள்தோறும் ஆய்வுகள், அறிக்கைகள் என மன உளைச்சலுக்கும், நெருக்கடிக்கும் ஊழி யர்களை துன்புறுத்தும் போக்கினை கைவிடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தணிக்கையாளர் மாரி. தெட்சிணாமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்.ராஜேந்திரன், மாவட்ட துணைத்தலைவர் நல்லமுத்து, அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் வாசுகி ஆகியோர் கண்டன உரை யாற்றினர். வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) அருண் மற்றும் ஏராளமான ஊழி யர்கள் கலந்து கொண்டனர். வட்டார செய லாளர் ஜீவா நிறைவாக நன்றி கூறினார்.