முசிறி, ஜூலை 15- திருச்சி மாவட்டம் தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய பகுதி கிராமங்களில் மத்திய அரசின் திட்டத்திலிருந்து மழைநீர் சேக ரிப்பு, தடுப்பணைகள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மத்திய குழுவினர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்வதற்காக வருகை தந்தனர். அப்போது தும்பலம், சூரம்பட்டி, ஊரக்கரை உள்ளிட்ட கிரா மங்களில் மழைநீர் சேகரிப்பு பணிகளை பார்வையிட்ட ஆய்வு குழுவினர் பணிகள் சிறப்பாக மேற்கொள்ள அறிவுரை வழங்கி னர். முன்னதாக தும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை, மத்திய குழுவினர் தொடங்கி வைத்தனர். இதே போன்று ஜம்புமடை, எம்.புதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதி களிலும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. ஒன்றிய ஆணையர்கள் சாமிநாதன், மணிவேல், ஒன்றிய பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.